ETV Bharat / state

மீண்டும் திறக்கப்படும் தலைஞாயிறு சர்க்கரை ஆலை - பட்ஜெட்டில் அறிவிப்பு; மகிழ்ச்சியில் விவசாயிகள்!

author img

By

Published : Mar 20, 2022, 8:19 AM IST

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் (Tamil Nadu Agriculture Budget 2022-23) மயிலாடுதுறை அருகே உள்ள தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விவசாயிகள்
விவசாயிகள்

மயிலாடுதுறை: மணல்மேடு அருகே உள்ள தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் 1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 700-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர். 23 ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த ஆலையானது ஒரு டன்னுக்கு 97 கிலோ சக்கரை அரவையை உற்பத்தி செய்தது.

1993 ஆம் ஆண்டில் ரூ.25 கோடி லாபம் ஈட்டியது. இந்நிலையில், 1994ஆம் ஆண்டு ரூ. 33 கோடியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கப் பணிகளை முறையாக செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டிய நிலையில், ஒரு டன்னுக்கு 59 கிலோ மட்டுமே சர்க்கரை அரவை தந்து நஷ்டம் ஏற்பட்டது.

ஆலை புனரமைப்புக்கு ரூ.56 கோடி

இந்நிலையில் நஷ்டத்தை சந்தித்து வந்த ஆலையை மறுசீரமைப்பு செய்ய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ், 2015ஆம் ஆண்டில் ஆலை புனரமைப்பு பணிக்கு ரூ.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். ஆனால், ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் ஆலையை புனரமைப்பதற்கான நிதியை, தமிழ்நாடு அரசு இதுநாள் வரை வழங்கவில்லை. தொடர்ந்து, நஷ்டம் ஏற்பட்டதால் 2017ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. ஆலையில் வேலை செய்த ஊழியர்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டனர்.

கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை

விவசாயிகள் மகிழ்ச்சி

சக்கரை ஆலையைத் திறக்கக் கோரி பல்வேறு தொடர் போராட்டங்களை கரும்பு விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் நடத்தினர். இந்நிலையில், தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் (Tamil Nadu Agriculture Budget 2022-23) தலைஞாயிறு சர்க்கரை ஆலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, கரும்பு விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூடப்பட்ட இந்த ஆலையை புனரமைக்க அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளைத் தொடங்க வேண்டும். ஆலைக்குத் தேவையான கரும்புகளை உற்பத்தி செய்து கொடுப்பதற்கு விவசாயிகள் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

டெல்டா மாவட்ட விவசாயிகள் கடந்த 8 ஆண்டுகளாகப் பட்ட சிரமத்தைப் போக்கும் வகையில், இந்த ஆலை திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளதால் மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் தமிழ்நாடு அரசு என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட்: அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து

மயிலாடுதுறை: மணல்மேடு அருகே உள்ள தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் 1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 700-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர். 23 ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த ஆலையானது ஒரு டன்னுக்கு 97 கிலோ சக்கரை அரவையை உற்பத்தி செய்தது.

1993 ஆம் ஆண்டில் ரூ.25 கோடி லாபம் ஈட்டியது. இந்நிலையில், 1994ஆம் ஆண்டு ரூ. 33 கோடியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கப் பணிகளை முறையாக செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டிய நிலையில், ஒரு டன்னுக்கு 59 கிலோ மட்டுமே சர்க்கரை அரவை தந்து நஷ்டம் ஏற்பட்டது.

ஆலை புனரமைப்புக்கு ரூ.56 கோடி

இந்நிலையில் நஷ்டத்தை சந்தித்து வந்த ஆலையை மறுசீரமைப்பு செய்ய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ், 2015ஆம் ஆண்டில் ஆலை புனரமைப்பு பணிக்கு ரூ.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். ஆனால், ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் ஆலையை புனரமைப்பதற்கான நிதியை, தமிழ்நாடு அரசு இதுநாள் வரை வழங்கவில்லை. தொடர்ந்து, நஷ்டம் ஏற்பட்டதால் 2017ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. ஆலையில் வேலை செய்த ஊழியர்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டனர்.

கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை

விவசாயிகள் மகிழ்ச்சி

சக்கரை ஆலையைத் திறக்கக் கோரி பல்வேறு தொடர் போராட்டங்களை கரும்பு விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் நடத்தினர். இந்நிலையில், தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் (Tamil Nadu Agriculture Budget 2022-23) தலைஞாயிறு சர்க்கரை ஆலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, கரும்பு விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூடப்பட்ட இந்த ஆலையை புனரமைக்க அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளைத் தொடங்க வேண்டும். ஆலைக்குத் தேவையான கரும்புகளை உற்பத்தி செய்து கொடுப்பதற்கு விவசாயிகள் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

டெல்டா மாவட்ட விவசாயிகள் கடந்த 8 ஆண்டுகளாகப் பட்ட சிரமத்தைப் போக்கும் வகையில், இந்த ஆலை திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளதால் மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் தமிழ்நாடு அரசு என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட்: அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.